மும்பை: நிர்வாண புகைப்படம் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக நடிகர் ரன்வீர் சிங் மும்பை போலீஸ் முன் ஆஜராக சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நிர்வாண போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டார். பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், மும்பையை சேர்ந்த அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) செம்பூர் காவல்துறையிடம் ரன்வீர் சிங் மீது புகார் அளித்தது. அதன் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 292 (ஆபாசமான புத்தகங்கள் விற்பனை போன்றவை), 293 (இளைஞர்களுக்கு ஆபாசமான பொருட்களை விற்பனை செய்தல்) போன்ற பிரிவுகளின் கீழ் ரன்வீர் சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.