இந்தி படத்திலிருந்து விலகினார் கீர்த்தி; பிரியாமணி வாய்ப்பை தட்டிச் சென்றார்

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார். விஜய்யுடன் சர்கார், பைரவா, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விஷாலுடன் சண்டகோழி 2, சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவருக்கு  இந்தி படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அதற்காக அவர் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்துக்கு மாறினார்.

மைதான் என்ற படத்தில் நடிக்க முடிவானது. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அஜய் தேவ்கன் கோச்சாக நடிக்கிறார். இப்படத்தின் ஒரு நாள் படப்பிடிப்பில் கீர்த்தி நடித்தார். இந்திக்கு செல்லும் ஆர்வத்தில் ஒல்லி தோற்றத்துக்கு மாறியது அவரது கதாபாத்திரத்துக்கு மைனஸாகிவிட்டதாம்.

ஒரு குழந்தையின் தாய் ஆகவும் நடிக்க வேண்டி இருப்பதால் இந்த கதாபாத்திரத்துக்கு கீர்த்தி பொருத்தமாக இருக்க மாட்டார் என பட தரப்பு அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து அப்படத்திலிருந்து கீர்த்தி விலகினார். தற்போது அந்த வாய்ப்பை பிரியாமணி தட்டி சென்றுள்ளார். ஏற்கனவே பிரியாமணி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்திருப்பதுடன் இந்தியில் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: