எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் இசை அமைப்பாளர் அனிருத் சமீபத்தில் கண்ணீர்விட்டு அழுதார். எதற்காக அழுதார் என்பதை தர்பார் பட ஆடியோ விழாவில் உருக்கமாக கூறினார். ‘தலைவருக்கு நல்ல ஆல்பம் கொடுக்குறீங்கன்னு பலர் என்னிடம் சொல்கிறார்கள். தலைவருக்காக நான் உயிரையே கொடுப்பேன், ஆல்பம் தர மாட்டேனா. நான் தலைவர் வெறியன். நான் நன்றாக மியூசிக் பண்ணுவேன் என்று 8 வருஷத்துக்கு முன்பு என்னை கண்டுபிடித்தவர் தனுஷ் சார் தான். அவருக்கு நன்றி.