யுஎஸ், ரஷ்யா, பாங்காக், சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடுக்கு சென்று நம்மூர் இயக்குனர்கள் படங்களை இயக்கி வரும் நிலையில் அமெரிக்கா சென்று செட்டிலான ஆரோக்யசாமி கிளமென்ட் கூவத்தூர் வந்து முடிவில்லா புன்னகை படம் இயக்கியிருக்கிறார். அமெரிக்காவிலிருந்து கூவத்தூர் வந்து படம் எடுத்திருக்கிறீர்களே இது அரசியல் படமா என்றபோது,’இல்லை இல்லை என பதற்றமானவர்,’சமூக வலைதளங்கள் மூலம் நிறைய பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இளம் தம்பதிகள் விவகாரத்தும் அதிகரிக்கிறது.