உதவி இயக்குனருடன் நயன்தாரா வாக்குவாதம்: படப்பிடிப்பு நிறுத்தம்

சென்னை: படப்பிடிப்பில் உதவி இயக்குனருடன் நயன்தாரா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதனால் படப்பிடிப்பே நிறுத்தப்பட்டதாகவும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நயன்தாரா நடிப்பில் உருவாகும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இந்த படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தபோது, குறிப்பிட்ட காட்சியை பற்றி நயன்தாராவிடம் உதவி இயக்குனர் விளக்கியுள்ளார். அப்போது நயன்தாரா இடைமறித்து சில கேள்விகளை கேட்க, உதவி இயக்குனர் அதற்கு பதில் சொல்லும்போது நயன்தாரா கோபமாக பேசியிருக்கிறார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. சுந்தர்.சியின் ஆஸ்தான நடிகையாக தமன்னா இருக்கிறார். அதனால் நயன்தாராவுக்கு பதில் இந்த படத்தில் தமன்னாவை நடிக்க வைக்கலாம் என்ற அளவில் ஆலோசனை நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. காரணம், இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே லாபத்தில் பங்கு வேண்டும் உள்பட பல கண்டிஷன்களை போட்டுத்தான் நயன்தாரா நடிக்க சம்மதித்தாராம். இதனால் அவரது செயலால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

Related Stories: