பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்க மாணவர்களுக்கு நயன்தாரா அறிவுரை

சென்னை : பெற்றோருக்கு மாணவர்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என்றார் நடிகை நயன்தாரா. சென்னையிலுள்ள ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் நயன்தாரா பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது: இந்த சமயத்தில்தான் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். நல்ல நண்பர்களை தேர்வு செய்வதும், வாழ்க்கையில் நமது பாதை சீராக செல்வதற்கு உதவியானதாக இருக்கும். படிக்கும் சமயத்தில் அதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். நண்பர்களுடன் ஜாலியாக நேரம் செலவழிக்கலாம்.

அதே நேரம், பெற்றோர் நமக்காக படும் கஷ்டத்தையும் மாணவர்கள் உணர வேண்டும். நமக்காக பாடு படும் பெற்றோருக்காக தினமும் சில நிமிடங்களாவது செலவிடுங்கள். அவர்களிடம் உட்கார்ந்து பேசுங்கள். அவர்களுக்கு மரியாதை கொடுங்கள். கல்லூரி வாழ்க்கை முடிந்த பிறகு எத்தனை உயரத்துக்கு போனாலும் கஷ்டப்பட்ட காலங்களை மறந்து விடாதீர்கள். பணிவாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு நயன்தாரா பேசினார்.

Related Stories: