சென்னை : பெற்றோருக்கு மாணவர்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என்றார் நடிகை நயன்தாரா. சென்னையிலுள்ள ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் நயன்தாரா பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது: இந்த சமயத்தில்தான் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். நல்ல நண்பர்களை தேர்வு செய்வதும், வாழ்க்கையில் நமது பாதை சீராக செல்வதற்கு உதவியானதாக இருக்கும். படிக்கும் சமயத்தில் அதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். நண்பர்களுடன் ஜாலியாக நேரம் செலவழிக்கலாம்.