நயன்தாரா படத்துக்காக 100 மரங்கள் வெட்டியதால் கர்நாடக அரசு நோட்டீஸ்

பெங்களூரு: நயன்தாரா நடிக்கும் படத்துக்காக 100 மரங்களை வெட்டியதால் கர்நாடக அரசு படத் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேஜிஎஃப் 2’ படத்துக்கு பிறகு யஷ் நடிக்கும் படம் ‘டாக்ஸிக்’. இதில் நயன்தாரா, ஹுமா குரேஷி உள்பட பலர் நடிக்கிறார்கள். நடிகை கீது மோகன்தாஸ் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பெங்களூரை அடுத்த காட்டு பகுதியில் நடைபெற்றது.

அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் படப்பிடிப்பில் பங்கேற்றனர். காட்டு பகுதியில் படப்பிடிப்புக்கு இடையூறு இருந்ததாகக் கூறி 100க்கு மேற்பட்ட மரங்களை படக்குழுவினர் வெட்டிவிட்டனர். இந்த தகவல் வெளியே கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எந்த முன் அனுமதியும் இல்லாமல் படக்குழுவினர் அத்துமீறி செயல்பட்டதால் வனத்துறை அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக கர்நாடக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டாக்ஸிக் படத்தை தயாரித்து வரும் கேவிஎன் புரொடக்‌ஷன் நிறுவனத்துக்கும் கீது மோகன்தாசுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளதாம். இதனால் இப்படக்குழுவினர் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories: