சூரியன் உணர்த்தும் தத்துவ ரூபம்!

இந்திய கலாசாரம் சூரிய வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இன்று  சூரியனிலுள்ள பௌதீக சக்தியை அறிவியல் ஆராய்ச்சியினர். ஆய்ந்து பார்க்க  முயலுகையில், அந்த மகா ஜோதியிலிருக்கும் திவ்ய சக்திகளை நம் வேத கலாசாரம்  பல யுகங்களுக்கு  முன்பாகவே கண்டு பிடித்துவிட்டது. சூரியனுக்கு நம்  மதத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணிலடங்காத பெயர்களின் அர்த்தங்களைப்  புரிந்து கொண்டாலே போதும் மகரிஷிகளின் ஞான திருஷ்டியை நமஸ்கரிக்காமல்  இருக்க முடியாது.

ஆதித்யன், சூரியன், ரவி, மித்ரன், பானு, பகன்,  பூஷா, அர்யமன், மரீசி, அர்கன், பாஸ்கரன், பிரபாகரன், மார்த்தாண்டன். . . இப்படி எத்தனை எத்தனையோ பெயர்கள், மந்திரங்களாக  உபாசனை செய்யப்படுகின்றன.  சாதாரணமாக கிரகிக்கப்படும் சூரிய சக்தி பூமியின் மேல் அந்தந்த உயிர்களின்  உடலின் தேவைக்கேற்ப வெவ்வேறு விதமாக இருக்கிறது. இது ‘பௌதீகக் கண்ணோட்டம்  .’இதில், சூரிய சக்தியை ஆராய்ச்சியால், யந்திர தொழில்  நுட்ப கருவிகளால் கிரகித்து, புதிய கண்டுபிடிப்புகளை சாதிப்பதென்பது  ‘விஞ்ஞானப் பயன்பெறும் கண்ணோட்டம்.’ இதுவும் ஒரு வித்ததில் பௌதீகமே.ஆனால் ஆதித்தியனிலுள்ள அற்புத தெய்வீக அருளை உபாசனையால் மட்டுமே அடைய  முடியும். இது உபாசனை கண்ணோட்டம்.

இன்னுமொரு சூட்சுமப் பார்வை உள்ளது. அது  தத்துவ ரீதியான ஆராய்ச்சி. இது உபநிஷத்துகள் விளக்கும் ஆத்ய ஞானம்.  இவ்விதம் நான்கு வழிகளில் சூரிய மூர்த்தியை கிரகிக்கலாம் அடையலாம். அவரவருக்கு இயன்ற அளவு அந்த ஒளி விளக்கான சூரிய மூர்த்தியை அடைய முயலுகிறார்கள். நம் வேதக்கல்வி நான்கு விதமான கோணங்களைக் காட்டுகிறது. பானுமூர்த்தியின்  நாமங்களின் அர்த்தங்களே இவ்விஷயத்தைப் பளிச்சிட்டுக் காட்டுகின்றன. நம் வேதக்கல்வி நான்கு விதமான கோணங்களைக் காட்டுகிறது. பானுமூர்த்தியின்  நாமங்களின் அர்த்தங்களே இவ்விஷயத்தைப் பளிச்சிட்டுக் காட்டுகின்றன.

நம் புராதன சாஸ்திரங்களின் மேல் கௌரவம் வைத்து, நிர்மலமான மனதுடன்  பரிசீலித்தால் இச்சிறப்புகளை புரிந்து கொள்ள முடியும். சூரியனை ‘சப்தாஸ்வரத  மாரூடம்’ என்ற நாமத்தால் துதிப்பது வழக்கம். ‘ஏழு குதிரைகள் பூட்டிய  ரதத்தின் மேல் சூரிய பகவான் பவனி வருவான்’ என்பது வர்ணனை.இந்த வர்ணனையில் உள்ளதை ஆராய்வோம் :-‘‘ரம்ஹண சீலத்வாத் ரத: ’’ - நகரும் லட்சணம் கொண்டது ரதம். ‘பாய்வது’  ஒளியின் குணம். ஒளிக்கு மூலமானவன் பிரபாகரன். அஸ்வம் என்றால் ‘ஒளிக்கதிர்’  என்று பொருள்.அஸூ வ்யாப்தௌ… சீக்கிரத்தில் வியாபிக்கும் குணம்  கொண்து அஸ்வம். இதுவும் ஒளியின் குணமே. எனவே தான் சூரிய கிரணங்களை  குதிரைகள் என்று குறிப்பிட்டார்கள்.‘‘ஏகோ அஸ்வோ வஹதி சப்த  நாமா . . . ’’ ‘ஒரே குதிரையே ‘ஏழு’ என்றழைக்கப்படுகிறது’ என்று வேதமந்திரம்  விளக்குகிறது. இதனை நாம் கவனித்துப் பார்த்தால், நம் சாஸ்திரங்களின்  ஆதாரத்தோடு அனேக கருத்துக்களை ஏற்க முடிவும்.

1. ஒரே சூரிய காந்தி  (ஒளி) எந்த வித வர்ண வேறுபாடும் இல்லாத சுத்த வர்ணத்தில் இருக்குமென்றும், அதுவே வெவ்வேறு மாறுதல்களால் ஏழு நிறங்களாக பிரிக்கப்படுகிறதென்றும்  அனைவரும் அறிந்ததே, இந்த ஏழு நிறங்களே ஏழு குதிகளை! இது நிறங்களோடு கூடிய  சூரிய ஒளியின் ஸ்வரூபம் .

2. சூரிய உதயத்தை அனுசரித்து தினங்களைக்  கணக்கிடுகிறோம். பகலுக்குக் காரணமானவர் திவா - கரன். இப்படிப்பட்ட  உதயங்களால் தான் கிழமைகள் ஏற்படுகின்றன. கிழமைகள் ஏழு. கால உருவமான ஆதித்தியன் ஏழு நாட்களையே ஏழு குதிரைகளாகக் கொண்டு வலம் வருகிறான்.

3.     புராணங்களின் படி சூரியனின் ஏழு குதிரைகளின் பெயர்கள் : - ஜய, அஜய, விஜய,  ஜிதப்ராண, ஜிதஸ்ம, மனோஜவ, ஜிதக்ரோத. - (ஆதாரம்  பவிஷ்ய புராணம்), ஒளி  பரவுவதில் உள்ள பலவித நிலைகளே. சக்தியின் தன்மையிலுள்ள வித்தியாசங்களே  இப்பெயர்கள்.

4. வேதஸ்வரூபனாக ‘ருக்யஜூஸ்ஸாம பாரத :’ என்று பானுவை  நம் தர்மம் கருதுகிறது. ஹனுமானும், யாக்ஞவல்கியரும் சூரியனை வழிபட்டு வேத  ஞானத்தை அடைந்தார்கள். வேதத்திலுள்ள முக்கிய சந்தஸூகள் ஏழு :- காயத்ரி,  த்ரிஷ்டுப், அனுஷ்டுப், ஜகதீ, உஷ்னிக், பஙக்தீ, ப்ருஹதீ.

5. சூரியனிலுள்ள ‘சுஷூம்னா என்ற கிரணசக்தி சந்திர கிரகம் உருவாகக் காரணம்.  அதோபோல் செவ்வாய் கிரகத்திற்கு ‘சம்பத்வசு’ (மற்றொரு பெயர் - உதன்வசு) என்ற  பெயர் கொண்ட சூரிய கிரணம் காரணம் ‘விஸ்வ கர்மா’ புத கிரகத்திற்கும்,  ‘உதாவசு’ பிரஹஸ்பதிக்கும், ‘விஸ்வ வ்யச்சஸூ’ சுக்ர கிரகத்திற்கும்,  ‘சுராட்’ சனிக்கும். ‘ஹரிகேச’ சகல நட்சத்திரங்களின் ஔி பரவுதலுக்கும்  காரணங்கள். ஏழு குதிரைகளாக உருவகப்படுத்தப்பட்ட கிரண சக்திகள் மூலம்  விஸ்வரத சக்ரகத்தை நடத்தும் நாராயணனே எல்லா கிரகமாகவும் இருப்பவன்.

6. நம் உடலில் தோல், எலும்பு, சதை, மஞ்ஞை, ரக்தம், மேதஸ், சுக்ரம்… என்ற ஏழு  தாதுக்கள் உள்ளை. இவற்றோடு சஞ்சரிக்கும் ரதமே இந்த தேகம். இவற்றை இயக்கும்  அந்தர்யாமி வடிவமான சைதன்யமே ஆதித்தியனாகிய பரமாத்மா.

7. நம்  முகத்தில் கண்கள் இரண்டு, நாசி துவாரங்களிரண்டு காதுகளிரண்டு, வாய் ஒன்று,  இந்த ஏழு ஞானேந்திரியங்களை வழி நடத்தும் புத்தி ரூபமான சைதன்யம் இவனே !

8. மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம் வரை நகரும் குண்டலினீ ஸ்வரூபமே அர்க்கன்.  இந்த மார்கத்திலுள் ஏழு சக்கரங்களின் ஸ்தானங்களே ஏழு குதிரைகள்.

இந்த ஏழு குதிரைகளோடு பயணிக்கும் சூரிய ஒளியின் விஸ்தரிப்பையே ஏழு  குதிரைகள் பூட்டிய ரதத்தின் சலனமாக வேத சாஸ்திரங்கள் போற்றுகின்றன. ஒவ்வொரு  தெய்வத்தின் உருவமும் ஒவ்வொரு தத்துவத்தின் அடையாளம். வேதங்கள் புகழும் சூரிய சக்திக்கு சகுண உருவமே ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் உலா வரும் ஹிரண்மய ஸ்வரூபம்.

ஜகத்தினை மலரச்செய்து, துயிலெழுப்பி, நகரும் சக்தியே ‘பத்மினி’. ரோக  நிவாரண விடியற்காலை சக்தியே ‘உஷாதேவி’. சூரிய ஒளியினால் தான் பொருட்களை  அடையாளம் கண்டு கொள்கிறோம். அதுவே ‘சம்ஞா சக்தி, வெளிச்சமிருந்தால் தான்  நிழலுக்கு இருப்பு. நிழலைத் தரும் வெளிச்சமே ‘சாயாதேவி’.இந்நான்கும் சூரியனின் ஒரே கிரணத்தின் வெவ்வேறு சொரூபங்கள். சூரியனை விட்டுப்  பிரியாத சக்திகள். இவற்றையே சங்கேதமாக சூரியனின் மனைவிகள் என்கிறோம்.

     

'மகர சங்கராந்தி'

நம் பூமிக்கு ஞானத்தை அளிப்பவர், வாழ்க்கையைப் படைப்பவர் ஆதித்ய தெய்வம். அவரிடமிருந்து பூமியின் மேல் கதிரொளி வீசுகின்ற கிரணக் கற்றைகள் ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஓர் ஆண்டில் 12 ராசிகளில் சஞ்சாரம் செய்தபடி 12 மாத காலத்தை ஒரு சுற்றாக (ஆவிருத்தி) ஏற்பாடு செய்பவன் பாஸ்கரன். உண்மையில் சூரியன் உதித்து மறைவதில்லை. ஆனால் சுழன்று கொண்டிருக்கும் பூமியின்மேல் வசிக்கும் நாம் ஒப்பீட்டுக் கண்ணோட்டத்துடன் கவனித்து.

 நமக்கு அனுகூலமான பரிபாஷையில் ‘சூரிய கமனம்’ என்கிறோம்.சூரியனின் கிரணக் கற்றைகள் பரவுதலே ‘சூரிய கிரமணம்’ அதாவது சூரியனின் நகர்வு இக்கிரணங்கள் நாமிருக்கும் பூகோளத்தின் தன்மையை ஒட்டி உத்தராயணத்தில் ஒரு விதமாகவும், தக்ஷிணாயனத்தில் வேறு விதமாகவும் இருக்கும். ஜல தத்துவத்திற்கு முக்கியத்துவமளிக்கும் தக்ஷிணாயனம் ‘சோம தத்துவம்’ எனப்படுகிறது. அக்னி (உஷ்ணம்) தத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது உத்தராயணம். இவ்விரண்டும் சேர்ந்ததே ஓராண்டு. ஆண்டு என்பதே காலக் கணிப்பிற்கு ஆதாரம்.

இதனைப் பிரதானமாகக் கொண்டே யுகங்களைக் கணக்கிடுகிறோம். உத்தராயணத்திலும் ஜல தத்துவம் இல்லாமலில்லை. ஆனால் பிரதானமானது அக்னி தத்துவமே. அதே போல் தக்ஷிணாயனத்தில் ஜல தத்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்தபடியே அதற்குத் துணையாக அக்னி தத்துவமும் இருக்கிறது. சூரிய கிரணங்களிலேயே இந்த அக்னி, ஜல சக்திகள் இரண்டுமிருக்கின்றன. சுத்த வெளுப்பான சூரிய ஒளி, ஜல சக்தியாலேயே பல வர்ணங்களாக ஒளி வீசுகிறது. எனவே தான் இக்கிரணங்கள் போஷிக்கும் சகல ஜீவராசிகளும் கூட அக்னி, ஜல தன்மைகள் இணைந்த உருவங்களாக உள்ளன. இந்த ரகசியத்தை, ‘அக்னி ஷோமாத்மகம் ஜகத்’ என்று வேதம் போற்றுகிறது. அக்னியை சிவ தத்துவமாகவும் ஜலத்தை (சோம) சக்தி தத்துவமாகவும் கொண்டு, உலகையும் காலத்தையும் சிவசக்தி ஸ்வரூபமாக தரிசித்து வழிபடும் அறிவே,  யக்ஞமாக, பூஜையாக நம் சம்பிரதாயங்களில் இடம் பெற்றுள்ளது.

பகல் அக்னி (சிவ) ஸ்வரூபம், இரவுச் சக்தி (ஜகதம்பாள்) ஸ்வரூபம்… ஓர் ஆண்டுக்குப் பகல் போன்றது உத்தராயணம். தினங்களுள் பகல் தொடங்கும் போது தெய்வ பூஜை செய்து பின் நம் வேலைகளைத் தொடங்குகிறோம். அதன் மூலம் வேலை செய்யத் தேவையான சங்கல்பம், செயல், சித்தி (வெற்றி) - இம்மூன்றும் திவ்ய சக்தியால் பவித்திரமாகி காரிய சித்தியை அளிக்கின்றன. அதே போல் ‘உத்தராயணம்’ எனப்படும் ஆண்டின் பகல் பாகம் ‘மகர சங்க்ரமண’த்துடன் தான் (மாதப் பிறப்பு) தொடங்குகிறது.

ஒளியை வழிபடும் ‘பா’ ரத மக்கள் வெளிச்சத்திற்கு பூரண பிரகாசத் தையளிக்கும் உத்தராயண ஆரம்பத்தை (மகர சங்கராந்தியை) பரம புண்ணிய தினமாகக் கொண்டாடுகிறார்கள். இது ஆண்டிற்கு ‘ப்ராத’ சந்தியாகாலம்’ அதாவது காலை வேலை. அதே போல் ஆடி மாதத்தில் பிரவேசிக்கும் ‘கடக சங்க்ரமணம்’ (கடகச் சேர்க்கை) ஆண்டிற்கு ‘சாயம் சந்தியா காலம்’ அதாவது மாலை வேளை. எனவே தான் அதனைக் கூட புண்ணிய காலமாகப் போற்றுகிறோம். பருவ காலத்தில் பளிச்சென்று தென்பட்டு அனுபவத்திற்கு வருகின்ற தெய்வீகமான ஒரு மாற்றம் ‘மகர சங்க்ரமணம்’ (மகரச் சேர்க்கை) ஒளியின் பயணத்தில் ஏற்படும் மாற்றத்தை நேரடியாக அனுபவிக்கும்.

இந்த பருவ காலத்தின் போது தான், இந்த மாற்றத்தில் அதாவது ‘க்ராந்தி’யில் நன்மையே நிகழவேண்டும் என்று ‘வெளிச்சக் கடவுளான’ சூரியனை வேண்டிக் கொள்கிறோம். இந்த புண்ணிய தினத்தில் தெய்வீக சக்திகளை எளிதாகப்பெற முடியும் என்பார்கள். எனவே தான் இந்த நாளில் தியானம், தானம், ஜபம் போன்ற அனுஷ்டானங்களும், பித்ரு தர்ப்பணம் போன்ற நற்காரியங்களும் அமோக பலனளிக்கும் என்பது சாஸ்திர வாக்கு.யக்ஞத்தில் முதல் அறுவடை செய்த நெல்லைக் குத்திப் பெற்ற அரிசியால் சமைத்து தேவதைகளுக்குப் ப்ரீதியாக ஆஹூதி அளிப்பது நம் சம்பிரதாயம்.

இந்த யக்ஞத்தின் அம்சமாகவே புது அரிசியில் பாயம், பொங்கலிட்டு பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கம் சாமான்ய ஜனங்களிடையே கூட பிரபலமாக உள்ளது.சூரிய கிரணங்களே, ஒளி உருவம் படைத்த தேவதைகளுக்கு ராஜவீதிகள், ஆதித்யனிடமிருந்து நம்மிடம் வரும் திவ்ய அனுக்ரகமும் சரி, நம்மிடமிருந்து சூரிய மண்டலத்திலிருக்கும் பரமேஸ்வரனுக்கு சமர்பிக்கப்படும் பக்தி நமஸ்காரங்களும் சரி, இந்த கிரணங்களின் மார்க்கமாகவே பயணிக்கின்றன. அதாவது சூரிய கிரணங்கள் நமக்கும் தெய்வத்திற்கு நடுவில் உள்ள தொடர்பு என்று ஆகிறது. இவ்வொளிக் கிரணக் கற்றையே யக்ஞத்தில் எழும்பும் அக்னி ஜ்வாலை. சங்கராந்தியை சரிவரக் கொண்டாடுவதே மனிதன் செய்யக் கூடிய மிகப் பெரிய யக்ஞம்.

Related Stories: