பனங்கற்கண்டு பால் பொங்கல்

தேவையானவை

பனங்கற்கண்டு - 100 கிராம்

பச்சரிசி - 1 கப்

பாசிப்பருப்பு - 1/4 கப்

பால் - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

ஏலக்காய் - 2

உலர் திராட்சை, முந்திரி - தலா ஒரு ஸ்பூன்

பாதாம் துருவல் - 1 ஸ்பூன்

தேங்காய்த்துருவல் - 1/4 கப்

செய்முறை

வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அரிசியை கழுவி  சுத்தம் செய்து, பாசிப்பருப்பு, பால் சேர்த்து குழைய வேகவிடவும். சூடான  நெய்யில் ஏலக்காய், உலர்திராட்சை, முந்திரியை வறுத்து இதில்  சேர்க்கவும். இறுதியாக பொடித்த பனங்கற்கண்டு, தேங்காய்த்  துருவல் சேர்த்துக் கிளறவும். பனங்கற்கண்டு கரைந்ததும் சிறிது நெய் ஊற்றி  அடுப்பில் இருந்து இறக்கவும். பின்னர் பாதாம் துருவலை சேர்க்கவும். பனங்கற்கண்டு பால் பொங்கல் ரெடி.

Related Stories: