பட்டாபிராம் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் படுகாயம்

ஆவடி: ஆவடி அடுத்த பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன் (47). பெரம்பூர் கேரேஜ் ரயில் பணிமனையில் ஏ.சி.டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து, அரக்கோணம் மின்சார ரயிலில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, கூட்ட நெரிசல் காரணமாக படியில் நின்று பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பட்டாபிராம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டபோது, தவறி விழுந்த பரந்தாமன், ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கி பலத்த காயமடைந்தார். இதை பார்த்த சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து, ரயிலை நிறுத்தனர். தகவலறிந்து வந்த ஆவடி ரயில்வே போலீசார், பரந்தாமனை மீட்டு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post பட்டாபிராம் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: