காரை புதுச்சேரியை சேர்ந்த பிரவீன்குமார் (40) ஓட்டி வந்தார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநத்தத்தை அடுத்த எழுத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு கார் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இந்துமதி (36) மற்றும் நந்தனா (13) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்ற 6 பேரும் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 6 பேரில் ஓட்டுநர் பிரவீன்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
The post கார் கவிழ்ந்து விபத்து 3 பேர் பரிதாப பலி: 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.