செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மேலமையூர் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் சப்ளை செய்யவேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.அந்த கோரிக்கையை ஏற்று, மேலமையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஹெலன்சிந்தியா பிஏஎஸ்எப் கெட்டாலிஸ்ட் என்ற தனியார் நிறுவனத்தின் பொருளுதவியோடு மேலமையூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் 1 மணி நேரத்தில் ஆயிரம் லிட்டர் குடிதண்ணீரை சுத்திகரிக்கக்கூடிய திறன் கொண்ட புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் பிளான்ட் நிறுவபட்டது. நேற்று நடந்த திறப்பு விழால், பிஏஎஸ்எப் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீபன் ஹார்ம்ஸ் மற்றும் மேலமையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஹெலன்சிந்தியா திறந்து வைத்தனர். …
The post மேலமையூர் ஊராட்சியில் புதிய சுத்திகரிப்பு குடிநீர் பிளான்ட் appeared first on Dinakaran.