பூலாங்குளம் குளத்தூர் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் சிறப்பு வழிபாடு

நெல்லை: பூலாங்குளம் குளத்தூர் சாஸ்தா கோயிலில் ஐயப்ப பக்தர்கள் கன்னி பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தினர். பூலாங்குளம் குளத்தூர் சாஸ்தா கோயிலில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் 13ம் ஆண்டாக கன்னிபூஜை நடந்தது. இதில் பக்தர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். இதையொட்டி சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் குளத்தூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாகப் பங்கேற்றனர். ஏற்பாடுகளை குருசாமி திருமலைச்சாமி தலைமையில் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.