சென்னை: பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த கலைஞரின் பிறந்த நாளை மாவட்டந்தோறும் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சத்துணவு பணியாளர் நலச்சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர் நலச்சங்க மாநில தலைவர் மு.வரதராஜன் வெளியிட்ட அறிக்கை: சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் வாழ்வில் பல்வேறு சலுகைகளை அறிவித்து அவர்களின் மனம் குளிர வைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர். கலைஞரின் 99வது நாள் பிறந்தநாள் விழாவை அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இறுதியில் சென்னையில் மாநில அளவில் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….
The post மாவட்டந்தோறும் கலைஞர் பிறந்தநாளை கொண்டாடுவோம்: சத்துணவு பணியாளர் நலச்சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.