திண்டுக்கல்: திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது யூசுப்பியா நகரில் கரீம் தெருவில் சந்தேகப்படும்படியாக கையில் சாக்கு பைகளுடன் நின்று இருந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் அதே பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் (44) என்பதும், விற்பனைக்காக 13 கிலோ புகையிலை பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்….
The post திண்டுக்கல் அருகே 13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது appeared first on Dinakaran.
