திருத்தணி பகுதியில் அரியவகை தும்பி கண்டுபிடிப்பு

திருத்தணி: திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் ராம்மோகன் உத்தரவின்பேரில் திருத்தணி வனசரகர் அருள் தலைமையில் வனவர் சுந்தரம் மற்றும் வனக்காவலர்களுடன் திருப்பதியை சேர்ந்த வைல்டு போட்டோகிராபர் இநேஷ் ஆகியோர் திருத்தணி அடுத்த கோரமங்கலம் மற்றும் கார்த்திகேயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது, அந்த பகுதியில் அரியவகை தும்பி இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த தும்பி வேறு எங்கேயும் இல்லை. இது திருத்தணி வனப்பகுதியில் மட்டுமே இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட பல்வேறு பூச்சிகள் குறித்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.  …

The post திருத்தணி பகுதியில் அரியவகை தும்பி கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: