சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதலாக 6 புதிய நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதலாக 6 புதிய நீதிபதிகளை நியமிக்க, உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் மாதம் ஒருமுறை கூடி, புதிய நீதிபதிகளை நியமனம் செய்வது பற்றி ஆலோசனை நடத்தும். இந்நிலையில், கொலிஜியத்தின் அமர்வு நேற்று நடந்தது. இதில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 6 வழக்கறிஞர்களை புதிய நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது. வழக்கறிஞர்கள் நெடுமலா மாலா, சுந்தர் மோகன், கபாலி குமரேஷ் பாபு, அப்துல் கனி அப்துல் ஹமீத், மற்றும் ஆர். ஜான் சத்யன் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த பரிந்துரை ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒன்றிய அரசும், ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்ததும், இந்த 6 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக பதவியேற்பார்கள்….

The post சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதலாக 6 புதிய நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: