வட இந்திய மக்களை வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்.. ராஜஸ்தானில் ஒரே வாரத்தில் 33 பேர் பலி; தமிழ்நாட்டில் 108 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்!!

டெல்லி : டெல்லி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் வரும் 29ம் தேதி வரை அதீத வெப்பம் சுட்டெரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட இந்திய மக்களை கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் பலோடியில் 2வது நாளாக 50 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியது. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நாட்டில் பதிவான வெப்பத்தில் இதுவே அதிகமாகும். அதாவது 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெயில் சுட்டெரிக்கிறது. ராஜஸ்தானில் வெப்ப அலை தாக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 33 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுக்கு அதீத வெயிலுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு ராஜஸ்தானில் இதே போன்று அதீத வெப்பநிலை தொடரும் என்றும் பின்னர் படிப்படியாக குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திற்கு 2 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் டெல்லி, சண்டிகர், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், சட்டிஸ்கர், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இன்னும் சில நாட்களுக்கு வெப்பம் அதிகமாகவே இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தமிழ்நாட்டில் மீண்டும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் வெயில் 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 108° F வெயில் கொளுத்தும் என்றும் மற்ற மாவட்டங்களில் வெயில் சற்று குறைந்து காணப்படும் என்றும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

The post வட இந்திய மக்களை வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்.. ராஜஸ்தானில் ஒரே வாரத்தில் 33 பேர் பலி; தமிழ்நாட்டில் 108 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்!! appeared first on Dinakaran.

Related Stories: