தற்போது விக்ரம் பழைய நிலைக்கு திரும்பிய நிலையில் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சமூக பிரச்சனைகள் குறித்து பேசும் படங்களை இயக்கும் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை கிளப்பி இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ‘தங்கலான்’ படத்தில் விக்ரமுடன் பார்வதி திருவோத்து, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்காக நீண்ட தலைமுடி, தாடி என வேறலெவல் லுக்கில் வலம் வருகிறார் விக்ரம். அதே போல் படத்தில் நடிக்கும் மற்றவர்களும் பழங்குடியினர் வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் ‘தங்கலான்’ படம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், இந்தப்படத்திற்காக மேக்கப் போடும் புகைப்படங்களை பகிர்ந்து, ‘நான் தினமும் நான்கு முதல் ஐந்து மணி நேரங்கள் மேக்கப் மற்றும் காஸ்டியூம் ஆகியவற்றிற்காக செலவழிக்கிறேன். அவ்வளவு நேரம் அசையாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். ‘தங்கலான்’ படத்திற்காக அவர் இவ்வளவு தூரம் மெனக்கெடுவதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
The post ‘தங்கலான்’ படத்திற்காக 5 மணி நேரம் மேக்கப் போட்ட மாளவிகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.