உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி: கலெக்டர், எஸ்பி பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த பாண்டூரில் உள்ள பிரியதர்ஷினி பல் மருத்துவ கல்லூரி சார்பாக உலக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி திருவள்ளூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திரா கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் இந்திரா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சிவபாதசுந்தரம், துணை முதல்வர் டாக்டர் வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் 100 க்கும் மேற்பட்ட பல் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு உலக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து கோஷங்களை எழுப்பியவாறு கையில் பதாகைகளை ஏந்திக் கொண்டு சென்றனர். பேரணி முடிவில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட எஸ்பி டாக்டர் வீ.வருண்குமார் ஆகியோர் கலந்துகொண்டு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். இதனைத்தொடர்ந்து பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட போலீஸ்  எஸ்பி டாக்டர் வீ.வருண்குமார்  சான்றிதழ்களை வழங்கினர். இதில்ல் மாவட்ட கொல்லை நோய் தடுப்பு அலுவலர் கார்த்திகேயன், மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்….

The post உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி: கலெக்டர், எஸ்பி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: