மதுரை, ஜூலை 20: மதுரையில் வாலிபருக்கு கொலை மிரட்ட விடுத்ததாக வக்கீல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை சமயநல்லூரை சேர்ந்தவர் கார்த்திக்(29). இவர் வழக்கு ஒன்றிற்காக மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது வக்கீல் செல்வக்குமார், கார்த்திக் நிறுத்தியிருந்த டூவீலர் சாவியை பறித்துக்கொண்டார். இது குறித்து அவர் வக்கீல் சங்க நிர்வாகிகளிடம் புகார் செய்துள்ளார். அதற்கு அவர் சாவியை கொடுத்து விடுமாறு கூறியுள்ளார். சாவியை தர மறுத்த செல்வக்குமார், கார்த்திக்கை அந்த இடத்திலேயே தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கார்த்திக் அண்ணாநகர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் செல்வக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
The post வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வக்கீல் மீது வழக்கு appeared first on Dinakaran.
