சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக கணினி உதவியாளர்களின் தின ஊதியத்தை அதிகரிக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக தற்காலிக கணினி உதவியாளர்கள் பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 2024 முதல் 2025 வரை 11 மாதங்களுக்கு தினக்கூலி அடிப்படையில் நாள் ஒன்றுக்கு ரூ.577 வீதம் 26 நாட்களுக்கு ரூ.17,602 என 167 தற்காலிக கணினி உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். தற்போது கணினி உதவியாளர்களுக்கு தினக்கூலி உயர்த்தப்பட்டு நாள் ஒன்றுக்கு ரூ.802ஆக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு 2025ம் ஆண்டு ஜூன் முதல் 2026ம் ஆண்டு மே மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான செலவின தொகை ரூ.47,990 கல்வி செலவினங்கள் என்ற தலைப்பில் மாநகராட்சி சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.
The post ரூ.6.50 கோடி மதிப்பில் 245 பள்ளிகளில் சிசிடிவி கேமரா : மேயர் பிரியா தகவல் appeared first on Dinakaran.
