சென்னையில் ஆர்ப்பாட்டம்: கீழடி ஆய்வின் முடிவை மறைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து திக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. தி.க. தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்த இந்த கண்டன ஆர்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்புக்குழு தலைவர் தங்கபாலு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணை தலைவர் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
* திருமாவளவன் பேசுகையில், ‘‘கீழடி ஆய்வு தொடர்பான அறிக்கையினை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பி உள்ளது. தமிழர்களின் தொன்மையே இந்தியர்களின் வரலாறு என்பதை அவர்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை” என்று கூறினார்.
The post கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாவிட்டால் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து நாடாளுமன்றத்தை முடக்குவோம்: திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா எம்பி ஆவேசம் appeared first on Dinakaran.
