இந்நிலையில், நேற்று மாலைக்கு பிறகு தமிழகத்தில் மழை பெய்வது தீவிரம் அடைந்தது. இன்று அது படிப்படியாக குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம். டெல்டாவில் தூறல் மழை நீடித்துக் கொண்டு இருக்கும். அடுத்தடுத்து வங்கக் கடல் பகுதியில் காற்று சுழற்சிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மெல்ல நகரும் காற்றின் காரணமாக ஈரப்பதம் உள்ள காற்றை தமிழக கடலோரப் பகுதிக்கு அது கொண்டு வரும். கடலோரம் பயணித்துக் கொண்டு இருக்கும் காற்று தமிழகத்தை குளிர்விக்கும் நிலை உள்ளது.
இந்த சூழ்நிலையில், இன்று தென்மேற்கு பருவமயைின் தீவிரம் குறைந்து வங்கக் கடலோரத்தில் லேசான மழை மட்டுமே பெய்யும். மேற்கில் இருந்து வரும் காற்று கிழக்கு நோக்கி சென்று விடும். இருப்பினும் 18ம் தேதி வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். மாலை இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும். திருவள்ளூர் தொடங்கி சேலம் வரை மழை பெய்யும். தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். மேலும், 24ம் தேதியில் இருந்து மீண்டும் மழை பெய்யத் தொடங்கும். மாலை இரவில் வெப்ப சலன மழை பெய்யும். இது பரப்பில் மேலும் அதிகரித்து இடி மின்னல் மழை பெய்யும்.
The post அவலாஞ்சியில் 300 மிமீ கொட்டியது தென்மேற்கு பருவமழை குறைய தொடங்கும் appeared first on Dinakaran.
