ெசங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி சிபிஎஸ்இ தேர்வில் 100 சதவீத தேர்ச்சி

செங்கோட்டை,மே 16:செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த கல்வி ஆண்டோடு தொடர்ந்து 5வது முறையாக 100 சதவீத தேர்ச்சி பெற்றது. பிளஸ் 2 தேர்வில் மாணவி மஹ்மூதா ரோஷினி மற்றும் பத்தாம் வகுப்பில் மாணவி பவுஸானா ஆகியோர் பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள், திறமையாக செயலாற்றிய ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.

The post ெசங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி சிபிஎஸ்இ தேர்வில் 100 சதவீத தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: