இந்த கோயில் கட்டிடம் தனது வீட்டிற்கும், தெருவிற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டப்படுவதாக கூறி நடிகர் வடிவேல் பாணியில் அப்பகுதி கீழத்தெருவை காணவில்லை என்று பிரபல யூடியூபரும், நடிகருமான ஜி.பி.முத்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்திருந்தார். இதனால் கோயில் திருப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து பொய்யான குற்றச்சாட்டை கூறி கோயில் கட்டுவதற்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி, ஜி.பி.முத்துவின் வீட்டை நேற்று பெருமாள்புரம் ஊர் மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வந்த போலீசார் இரு தரப்பினர் சமதானப்படுத்தினர்.
The post கோயில் கட்ட எதிர்ப்பு; பிரபல யூடியூபர் வீடு முற்றுகை appeared first on Dinakaran.
