சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 16ம் தேதி 100 பேருந்துகளும், 17ம் தேதி 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து நாளை 24 பேருந்துகளும், நாளை மறுநாள் 100 பேருந்துகளும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
The post முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 1500 சிறப்பு பஸ் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.
