மூணாறு, மே 14: கேரளா மாநிலம் மூணாறில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்ட தேவிகுளம் கேப் ரோடு சாலையில் நேற்று முன் தினம் பெய்த கனமழையில் பாறை கற்கள் உருண்டு விழுந்ததில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. இந்நிலையில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த பாறைகற்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீக்கியதை தொடர்ந்து சாலை சீரமைக்கபட்டு போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளதாக என்று மாவட்ட கலெக்டர் வி.விக்னேஷ்வரி தெரிவித்தார்.
The post மூணாறு கேப் சாலை சீரமைப்பு appeared first on Dinakaran.
