தமிழ்நாட்டு சிலை வெளிநாட்டில் ஏலம் விடுவது தடுக்கப்பட்டுள்ளது: தமிழ்நாடு சிலை தடுப்பு பிரிவினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு

சென்னை: தமிழ்நாட்டு சிலை வெளிநாட்டில் ஏலம் விடுவது தடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு சிலை தடுப்பு பிரிவினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார். நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த சிலைகள், கலை பொக்கிஷங்களை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லக் கூடாது என ஒன்றிய அரசு 1972-ல் சட்டம் இயற்றியது.

ஆனால், அதையும் மீறி இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து ஏராளமான பழமை வாய்ந்த சிலைகள், கலை பொக்கிஷங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கண்ணப்ப நாயனார் உலோகச்சிலை திருட்டு குறித்து 2010-ல் திட்டச்சேரி காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. நாகை மாவட்டம் திருப்புகழூர் அக்னீஸ்வரர் கோயிலைச் சேர்ந்த இந்த உலோகச் சிலை 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நெதர்லாந்தில் மாண்டரிச்லின் நுண்கலை கண்காட்சியில் கண்ணப்ப நாயனார் சிலை ஏலம் விடும் தகவல் கிடைத்தது. சிலை திருட்டு தடுப்புப் பிரிவினர் நெதர்லாந்து காவல்துறைக்கும் இந்திய தொல்லியல்துறைக்கும் மின்னஞ்சல் அனுப்பினர். நெதர்லாந்து வெளியுறவு அமைச்சக கட்டுப்பாட்டில் உள்ள சிலையை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு சிலை தடுப்புப் பிரிவு காவல்துறையின் துரித நடவடிக்கையால், நெதர்லாந்து நாட்டில் கண்ணப்ப நாயனார் சிலை ஏலம் விடப்பட இருந்தது தடுத்து நிறுத்தம் செய்யப்பட்டது.
இச்சிலை, அந்நாட்டு வெளியுறவு அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் தற்போது இருக்கும் நிலையில், அங்கிருந்து இந்தியா கொண்டுவருவதற்கான சட்ட பூர்வ பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.

 

The post தமிழ்நாட்டு சிலை வெளிநாட்டில் ஏலம் விடுவது தடுக்கப்பட்டுள்ளது: தமிழ்நாடு சிலை தடுப்பு பிரிவினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: