தேசிய இணையவழி குற்றத்தடுப்பு அறிக்கையில் 1,27,065 புகார்களும், அவற்றில் 4,326 புகார்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 80,206 புகார்கள் மீது சிஎஸ்ஆர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2024ம் ஆண்டு இணையவழி மோசடிகளில் ரூ.1,674 கோடி பொதுமக்கள் இழந்துள்ளனர். அதில் 772 கோடி முடக்கப்பட்டு, சுமார் ரூ.83.34 கோடி பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது. மோசடி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் இருந்து 20,453 சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு சட்டவிரோத மற்றும் ேமாசடி இணையதளங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை மூலம் 52 இணையதளங்கள், 274 யூடியூப் சேனல்கள், 837 பேஸ்புக் பக்கங்கள், 608 இன்ஸ்டாகிராம் பக்கங்கள், 55 டிவிட்டர் பக்கங்கள், 3 கூகுள் பிளேஸ்டோர் போலி கடன் செயலிகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகள் பயன்படுத்திய 66,217 சர்வதேச செல்போன் கருவி அடையாள எண் (ஐஎம்இஐ) முடக்கப்பட்டு, 48,031 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 16,317 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஆன்லைன் மூலம் சைபர் குற்றவாளிகள் தமிழகத்தில் 2024ம் ஆண்டு பொதுமக்களிடம் ரூ.1,674 கோடி மோசடி: குற்றவாளிகளின் 20,453 சிம் கார்டுகள் முடக்கம் appeared first on Dinakaran.
