அதில் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துப் போட வேண்டுமென்று தலையிலே கொட்டி எல்லா கவர்னர்களுக்கும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்தியாவில் நம்முடைய முதல்வர் உட்கார்ந்த இடத்திலிருந்தே இந்தியப் பெருமையை நிலைநாட்டியிருக்கிறார். இவர் ஒரு வழிகாட்டியாக இருக்கிறார். நான் பார்த்து வளர்ந்த பிள்ளை என்பதால், இந்த மன்றத்திலேயே அவருக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டுமென்று ஆசை. காரணம், உட்கார்ந்த இடத்திலேயே, நான்காண்டுக் காலத்திற்குள்ளாக, அகில இந்தியாவே பெருமைப்படும் வகையில் மற்றொரு அரசியலமைப்பு திருத்தம் வரவிருக்கிறது. அந்த நிலையைக் கொண்டுவந்தவர் என்று நாளை வரலாற்றில் எழுதுவார்கள். இதைக் கொண்டுவந்தவர் யார் என்று கேட்டால், தளபதி மு.க.ஸ்டாலின் என்று வரலாற்றில் எழுதுவார்கள். ஆகையினால், அவருக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
The post உட்கார்ந்த இடத்திலிருந்தே இந்திய பெருமையை நிலைநாட்டியிருக்கிறார் முதல்வருக்கு மன்றத்திலேயே முத்தம் கொடுக்க ஆசை: அமைச்சர் துரைமுருகன் பேச்சு appeared first on Dinakaran.
