இந்த நிலையில், பிரதமர் மோடி எலான் மஸ்குடன் நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர். இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன்னில் நடந்த சந்திப்பின் போது நாங்கள் பேசிய விஷயங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து எலான் மஸ்க்கும் நானும் கலந்துரையாடினோம் தொழில்நுட்பம், புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான மகத்தான வாய்ப்புகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தத் துறைகளில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
The post தொழிலதிபர் எலான் மஸ்குடன் பிரதமர் மோடி போனில் பேச்சு appeared first on Dinakaran.