கோடியக்கரை அருகே அதிர்ச்சி சம்பவம்.. தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!!

நாகை: கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் செருதூர் மீனவ கிராமத்தில் தங்கி மீன்பிடிக்க கவிதாஸ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு தோப்புத்துறை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் வேகமாக வந்து நாட்டுப்படகின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் படகின் முன்பகுதி பலகை சேதம் அடைந்தது. தொடர்ந்து இலங்கை கடற்படையினர், நாட்டுப்படகில் ஏறி அதில் இருந்த 7 மீனவர்களையும் கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் மீனவர்களிடம் இருந்த ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள், கடிகாரம் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்த ஜெகன், ராமகிருஷ்ணன், செந்தில், சாமுவேல் ஆகிய 4 மீனவர்கள் வேதாரண்யம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வேதாரண்யம் கடலோர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

The post கோடியக்கரை அருகே அதிர்ச்சி சம்பவம்.. தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!! appeared first on Dinakaran.

Related Stories: