கோவை, ஏப். 12: கோவை கவுண்டம்பாளையம் பேங்க் ரோட்டை சேர்ந்தவர் சக்திதாசன். சமீபத்தில் இவரது வீட்டில் புகுந்த மர்மநபர் செல்போனை திருடி சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது வீட்டின் எதிரே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பட்டப்பகலில் சாவகாசமாக அந்த பகுதியில் நடமாடும் மர்மநபர் வீட்டுக்குள் புகுந்து செல்போனை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
அந்த நபர் இதேபோல் அதே பகுதியில் மற்றொரு வீட்டிலும் செல்போனை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் அந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி செல்போனை திருடி செல்லும் மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
The post வீடு புகுந்து செல்போன் திருடும் மர்ம நபர் appeared first on Dinakaran.