கோவை, மார்ச் 14: கோவை மேற்கு புறவழிச்சாலை முதற்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கு பைபாஸ் ரோடு அமைக்கும் பணிகள் கடந்த 2024-ம் ஆண்டு துவக்கப்பட்டது. மூன்று பேக்கேஜ் முறையில் பணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழிப்பாதையாக ரோடு போடும் பணி நடத்தப்பட்டது.
