முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த மசோதா வன்முறை வேதனை அளிக்கிறது. மேற்கு வங்க எல்லைப் பகுதிகளில் நிலைமையை பாருங்கள். இந்த மசோதா இப்போது நிறைவேற்றப்பட்டு இருக்கக் கூடாது. மேற்கு வங்கத்தில் 33 சதவீத சிறுபான்மையினர் உள்ளனர். அவர்களை நான் என்ன செய்வேன்? மேற்கு வங்கம், வங்க தேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா அனைத்தும் ஒன்றாக இருந்தன என்று வரலாறு கூறுகின்றது.
பின்னர் பிரிவினை நடந்தது.இங்கு வசிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என் பணியாகும். நான் உங்களையும் உங்கள் சொத்துக்களையும் பாதுகாப்பேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.மேற்கு வங்கத்தில் வக்பு திருத்த சட்டம் அமலாகாது” என்று தெரிவித்தார்.
The post மேற்கு வங்கத்தில் வக்பு திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது: முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டம் appeared first on Dinakaran.