விலை சரிவால் அதிர்ச்சி சாலையோரம் தக்காளியை கொட்டி சென்ற விவசாயிகள்

ராயக்கோட்டை : ராயக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். கடந்த 4 மாதங்களாக அனைத்து பகுதியிலும் தக்காளி விளைச்சல் அதிகரித்ததால் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது. முதல் தர தக்காளி 25 கிலோ கொண்ட ஒரு கிரேடு ₹250க்கு மட்டுமே விற்பனையாகிறது.

அதன்படி, கிலோ தக்காளி ₹10 கொள்முதல் செய்கின்றனர். அவற்றை வெளியூர்களுக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர். இரண்டாம் தர மற்றும் 3ம் தர தக்காளி கிரேடு ₹100ல் இருந்து ₹120வரையிலும் விற்பனையாகிறது. விலை வீழ்ச்சி காரணமாக விற்பனைக்காக கொண்டு வரும் தக்காளியை ராயக்கோட்டை சாலையோரங்களில் விவசாயிகள் கொட்டி விட்டு சென்றனர்.

The post விலை சரிவால் அதிர்ச்சி சாலையோரம் தக்காளியை கொட்டி சென்ற விவசாயிகள் appeared first on Dinakaran.

Related Stories: