ஒன்றிய அரசை கண்டித்து தவெகவினர்ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு,ஏப்.5: வக்பு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றிய ஒன்றிய அரசை கண்டித்து ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு, கருங்கல்பாளையம், காந்தி சிலை அருகில் தவெக சார்பில், நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார். இதில், ஆளும் பாஜ ஒன்றிய அரசின் மதவாதம், சிறுபான்மையினர் மீதான பிரிவினை நடவடிக்கை, நாடாளுமன்றத்தில் வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கோபி: கோபி பேருந்து நிலையத்தில் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பிரதீப்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் கமல், கோபி நகர செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து தவெகவினர்ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: