ஈரோடு மாநகராட்சி 2-வது மண்டலத்தில் இன்று பகுதி சபை கூட்டம்

 

ஈரோடு, மார்ச் 29: தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023ன் கீழ் மாநகராட்சி பகுதிகளில் பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஈரோடு மாநகராட்சி, 2வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கான பகுதி சபை கூட்டம் இன்று (29ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, வார்டு எண் 37ல் உள்ள காமராஜர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், உதவி ஆணையர் தீபாலட்சுமி, மண்டலத் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஈரோடு மாநகராட்சி 2-வது மண்டலத்தில் இன்று பகுதி சபை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: