12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

சென்னை: குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேலும், லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இந்த நிகழ்வுகளின் காரணமாக நேற்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென் காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. இன்று மேற்கண்ட மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதேநிலை 5ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 6ம் தேதி முதல் 8ம் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

வெப்பநிலையை பொருத்தவரையில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வட கிழக்கு பகுதிகளில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கவும் வா வாய்ப்புள்ளது. 6ம் தேதி அதிகபட்ட வெப்பநிலை உயரவும் வாய்ப்புள்ளது. சென்னையில் 5ம் தேதி வரை அதிகபட்சமாக 95 டிகிரி வெயில் நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் appeared first on Dinakaran.

Related Stories: