இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்களை பலிவாங்குற அணையை, அதாவது முல்லைப்பெரியாறு அணையை, குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும்னு ஒரு வசனம். அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை, அணையே இல்லாமல் இருந்தால் தான் சரி என்று ஒரு வசனம். இப்படி வசனங்கள் இடம் பெற செய்து காட்சி அமைப்புகளை சித்தரித்து முல்லைப் பெரியாறு அணையால் கேரள மக்களுக்கு ஆபத்து என்று எம்புரான் திரைப்படத்தில் திட்டமிட்டு கருத்து திணிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்த காட்சி வசனங்கள் நீக்கப்பட வேண்டும். திரையிடலை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post முல்லைப் பெரியாறு அணையை உடைக்க சதி; எம்புரான் திரைப்படக் காட்சிகளை நீக்குக: வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.
