1930ம் ஆண்டு பெரியார் இந்தி எதிர்ப்பு போரை தொடங்கி வைத்தார். 1960ம் ஆண்டு அண்ணா தலைமையில் மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன் நின்று நடத்தினார்கள். தமிழுக்காக தண்டவாளத்தில் தலையை வைத்த கலைஞர் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றான இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்று முழங்கினார். 1930ல் தொடங்கிய அந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போரை, நம்முடைய முதல்வர் காலத்தில் நிச்சயம் முடித்து வைப்பார். முதல்வர் தலைமையில் ‘‘தமிழ்நாடு வெல்லும் தமிழ்நாடு போராடும்’’. இவ்வாறு துணை முதல்வர் பேசினார்.
The post 1930ல் தொடங்கிய இந்தி திணிப்பு எதிர்ப்பு போரை முதல்வர் நிச்சயம் முடித்து வைப்பார்; துணை முதல்வர் உதயநிதி பேச்சு appeared first on Dinakaran.