சென்னை: உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அமுதம் நியாயவிலை அங்காடியில் திடீர் ஆய்வு செய்தார். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சென்னை மண்டலத்தில் கீழ்ப்பாக்கம், பிளவர்ஸ் சாலை, அமுதம் நியாயவிலை அங்காடியில் நேற்று முன்தினம் மாலையில் விற்பனை முனைய இயந்திரத்துடன் எடைத்தராசை இணைத்தல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டார். விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகை பதிவு, எடைத்தராசில் பொருளை எடைபோட்டு விற்பனை முனைய இயத்திரத்துடன் இணைத்து ரசீது போடுதல், போன்றவற்றை பற்றிக கடை விற்பனையாளரிடமும் பொதுமக்களிடமும் கருத்துகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குநர் மோகன், இணை ஆணையாளர், துணை ஆணையாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் (வடக்கு), இணைப்பதிவாளர் (பொது விநியோக திட்டம் -1) மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post அமுதம் நியாயவிலை அங்காடியில் அமைச்சர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.