முதல்வரை தலைவராக கொண்டு நிதித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் ஆகியோருடன் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை / மக்களவை மற்றும் சட்டமன்ற பேரவை உறுப்பினர்களுடன் வருகிற 29ம் தேதி (சனி) காலை 10.30 மணியளவில் சென்னை தலைமை செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீருதவி, மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள் மற்றும் மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் ஆகியவை குறித்து இந்த கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது.
The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வு: 29ம் தேதி தலைமை செயலகத்தில் நடக்கிறது appeared first on Dinakaran.