ஒரு தமிழ்க்கவி, உலகக் கவியாக மாறும் உயரம்தான் அந்த நூல். இந்த நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று அப்போது நான் வேண்டுகோள் வைத்தேன். அது இன்றைக்கு நிறைவேறியிருக்கிறது. முனைவர் மறைமலை இலக்குவனார் மொழிபெயர்த்த அந்த நூலை முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டிருக்கிறார். பல நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து வாழ்த்தியதை பார்க்கும்போது உலகக் கவியாக மகுடம் சூட்டப்பட்டுவிட்டார் நம்முடைய வைரமுத்து என்றே சொல்லத் தோன்றுகிறது. நீங்கள் படைப்பாளி என்பதால், 100 ஆண்டுகள் கடந்து வாழ்ந்து, உங்கள் பாடல்கள் எண்ணிக்கை 10,000 ஆகட்டும். படைத்த நூல்களின் எண்ணிக்கை நூறாகட்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
The post பல நாட்டினரும் வாழ்த்திய வைரமுத்து உலகக்கவியாக மகுடம் சூட்டப்பட்டு விட்டார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.