அந்த வகையில், பொது மக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவதன் முதல்கட்டமாக சென்னைக்கு அருகே ஒரு புதிய நகரம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் ஏன் தெரிவித்திருந்தார். இத்தகைய அறிவிப்பிற்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதில், தமிழ்நாட்டில் சாலைகள், திட்டங்களை நிறைவேற்றும் போது அதன் தரத்தையும் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசின் நிதிப் பற்றாக்குறை 3%ஆக உள்ளது என்பதை பாராட்டுகிறேன். சென்னை அருகே 2,000 ஏக்கரில் புதிய நகரம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை பாராட்டுகிறேன். தமிழ்நாடு அரசின் நிதி மேலாண்மையை நான் பாராட்டுகிறேன். காவிரி – குண்டாறு திட்டம் என்பது எடப்பாடி பழனிசாமி போட்ட வெறும் கல் மட்டும்தான். இவ்வாறு தெரிவித்தார்.
The post சென்னை அருகே 2,000 ஏக்கரில் புதிய நகரம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை பாராட்டுகிறேன்: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.