விரைவில் நல்ல செய்தி: டிடிவி. தினகரன் சஸ்பென்ஸ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட சட்டமன்றத்தொகுதி வாரியாக அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைய எடப்பாடி தடையாக இருக்கிறார். ஏனென்றால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை கைது செய்து விடுவார்களோ என அவர் பயந்துள்ளார். தன்னிடம் இரட்டை இலை சின்னம், கட்சி, பணபலம் உள்ளது என்ற அதிகார போக்கில் அவர் செயல்பட்டு வருகிறார்.

எடப்பாடி தலைமையில் போட்டியிட்ட 10 தேர்தல்களில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. வருகின்ற 2026 தேர்தலிலும் இவ்வாறு அவர் செய்தால் அதன் பின்னர் கட்சி மேலும் பலவீனமாகிவிடும். தற்போது செங்கோட்டையன் மனநிலையில் தான் அதிமுகவின் பெரும்பாலான தொண்டர்கள் உள்ளனர். விரைவில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கிறோம். மூன்றாவது மொழி இந்தி தான் என நான் கூறவில்லை. இருந்தாலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்தி மொழி பேசுவதால் மூன்றாவது மொழியாக இந்தி இருக்கலாம். அதில் தவறு ஏதும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post விரைவில் நல்ல செய்தி: டிடிவி. தினகரன் சஸ்பென்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: