இவர்கள் மூவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இந்த மனுக்கள் நீதிபதி கார்த்திக்கேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி, ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் ரவிச்சந்திரன், ஜோதிநாதன், அழகு பிரகாஷ்பதி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். எதிர்காலத்தில் சாதி ரீதியாகவோ, பெண்களுக்கு எதிராகவோ சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட மாட்டேன் என்று உத்தரவாத மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
The post கானா பாடகி இசைவாணிக்கு எதிராக அவதூறு பரப்பிய 3 பேருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் appeared first on Dinakaran.
