இந்த ரயிலில் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் பாறை உருண்டு விழுந்தால் தண்டவாளம் சேதம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
The post குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து! appeared first on Dinakaran.
