புதுடெல்லி: எஸ்டிபிஐயின் தேசிய தலைவர் பைசியை அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். கடந்த 2022ம் ஆண்டு தடை செய்யப்பட்ட பிஎப்ஐக்கு எதிரான விசாரணையின்போது கேரளாவை சேர்ந்த பிஎப்ஐ தலைவர் அப்துல் ரசாக், எஸ்டிபிஐ தேசிய தலைவர் பைசிக்கு ரூ.2லட்சத்தை பரிமாற்றம் செய்ததாக கூறப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக பைசி கைது செய்யப்பட்டுள்ளார்.
The post எஸ்டிபிஐ தேசிய தலைவர் பைசி கைது appeared first on Dinakaran.